கிளியேந்திய காளி
UPDATED : ஜூலை 26, 2021 | ADDED : ஜூலை 26, 2021
நினைத்ததை நிறைவேற்றும் கொண்டத்துக்காளி ஈரோடு மாவட்டம் பாரியூரில் இருக்கிறாள். பச்சைக் கிளியைக் கையில் ஏந்திய இவள் செழிப்பையும், செல்வத்தையும் அருள்பவள். இவள் அசுரனின் மார்பில் சூலாயுதத்தை ஊன்றிய நிலையில் இருக்கிறாள். தீய சக்தியிடம் இருந்து பக்தர்களைக் காப்பதை இது குறிக்கிறது. ஆடிவெள்ளிகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.