புட்டு நைவேத்யம்
UPDATED : ஜூலை 26, 2021 | ADDED : ஜூலை 26, 2021
தீராத நோயால் குழந்தைகள் தவித்தால் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு வடக்கே உள்ள புட்டார்த்தியம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். இந்த அம்மனுக்கு நைவேத்யமாக புட்டு படைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு 64 வகையான நோய்கள் தீர வேர் கட்டி மையிடுவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டியும் வழிபடுவர். குழந்தை பிறந்த அன்றே இங்கு வரலாம். தீட்டு தோஷம் கிடையாது. ஆடி கடைசி செவ்வாயன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கும்.