உள்ளூர் செய்திகள்

திசை மாறிய நதி

கேரளாவிலுள்ள காலடியில் அவதரித்தவர் ஆதிசங்கரர். இவரின் தாயார் ஆர்யாம்பாள். இவர் தினமும் நீராட தொலைவில் உள்ள பூர்ணாநதிக்கு நடந்து செல்வார். ஒரு நாள் ஆற்றங்கரையில் ஆர்யாம்பாள் மயங்கி விழுந்தார். தாயாரின் நிலை அறிந்த சங்கரர் வருந்தினார். ''பூர்ணா நதித்தாயே! என் தாயாரால் நடக்க முடியவில்லை. அதனால் ஊருக்குள் இருக்கும் என் வீட்டருகில் வா'' என்று பிரார்த்தித்தார். அன்றிரவே திசை மாறிய நதி, காலடி ஊருக்குள் ஓடத் தொடங்கியது. திடீர் வெள்ளத்தால் அங்கிருந்த கிருஷ்ணன் கோயில் அடித்துச் செல்லப்பட்டது. அப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் உதவியுடன் சங்கரர் மீண்டும் கோயில் கட்டினார்.