உள்ளூர் செய்திகள்

ரோஜாப்பூ அர்ச்சனை

'அவன் என்ன குபேரனா அள்ளிக் கொடுப்பதற்கு?' என்று சொல்வதுண்டு. ஆனால், திருப்பதி ஏழுமலையான் திருமணத்திற்கே கடன் கொடுத்தவர் குபேரன் தான். சிவந்த மேனி, குள்ள வடிவம், பெரிய வயிறு, சிரித்த முகம் என காட்சி தரும் இவர், தவத்தில் ஈடுபட்டு சிவனருள் பெற்றார். இவரது கிரீடத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். பால், தேன், தயிர், நெய், கற்கண்டு, மாவில் செய்த இனிப்பு வகை படைத்து, ரோஜா மலரால் அர்ச்சனை செய்ய இவரது அருள் கிடைக்கும்.