உள்ளூர் செய்திகள்

காளிக்கு சைவப்படையல்

காளி கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவது வழக்கம்.ஆனால் துாத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலுள்ள தம்பிராட்டி காளியம்மன் கோயிலில் சைவ உணவு படைக்கப்படுகிறது. பயங்கர முகத்துடன் இருந்தாலும் இந்த காளி சாந்த நிலையில் காட்சியளிக்கிறாள். விரித்த சடை, மூன்று கண்கள், எட்டு கைகளைக் கொண்ட இவளது முகம் மட்டும் சிரித்தபடி உள்ளது.