உள்ளூர் செய்திகள்

நல்லவர்களுடன் உறவாடுங்கள்

* கோடி பணம் கிடைத்தாலும் மனிதன் பொய் சொல்வது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல வேண்டும்.* கோடி பணம் கொடுத்தாவது நல்லோர்உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* கற்ற கல்வி கையளவு ஆகும். ஆனால், கற்க வேண்டிய விஷயமோ உலகளவு இருக்கிறது.* வெள்ளை மனம் கொண்டோருக்கு, சிவந்த தாமரைமலரில் உறையும் திருமகளின் அருள் கிடைக்கும்.* மனிதன் வருமானத்திற்கு ஏற்ப செலவிட வேண்டும். வருமானத்தை விட அதிகம் செலவு செய்தால் அறிவு அழியும். மானமும் போகும்.-அவ்வையார்