உள்ளூர் செய்திகள்

நீதியைப் பின்பற்றுங்கள்

* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப் பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள் போன்றது!* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.* ஓர் ராஜ்யம் தனக்குத் தானே உள் விரோதமாகப் பிளவுபடுமேயானால், அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.* நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச ராஜ்யம் அவர்களுடையது.* அயலவனை அவமதிப்பவன் பாபம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.* வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகளோ அழியவே அழியாது.- பைபிள் பொன்மொழிகள்