நம்பிக்கை வையுங்கள்
UPDATED : மார் 20, 2012 | ADDED : மார் 20, 2012
* கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.* கடவுளே உங்களுக்குள் செயலாற்றுகிறார். அவரே தமது திருவுளப்படி நீங்கள் செயற்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்துவிட வேண்டும்.* நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடமற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.* கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் புதிய ஆற்றல் பெறுவர். * பசும் புல்வெளி மீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்.* அமைதிக்கு வழி வகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றொருவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக!-பைபிள் பொன்மொழிகள்