சொந்த உழைப்பில் வாழுங்கள்
*தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறை மக்களுக்கான ஒளிமயமான உரிமைப் பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்.* பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவி சாயுங்கள். மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.* நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாமல் இருக்கட்டும். * மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்; அவரே ஆசி பெற்றவராவார்.* மிகுதியாகக் கொடுப்பவரிடம், மிகுதியாக எதிர்பார்க்கப்படும் என்பதால் பெற்றுக் கொள்வதைவிட, கொடுத்தலே பேறுடைமை என்று கடவுள் கூறியதை நினைவு கூற வேண்டும்.* உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.* தொலைவில் இருக்கும் உடன் பிறந்தாரை விட அண்மையில் இருக்கும் நண்பரே மேல்.-பைபிள் பொன்மொழிகள்