ஒற்றுமையாக வாழுங்கள்
* சிறிது கால துன்பங்களுக்குப் பின், கடவுள் உங்களைச் சீர்ப்படுத்தி, உ<றுதிப்படுத்தி, வலுப்படுத்தி வாழ்க்கையில் நிலை நிறுத்துவார்.* உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.* மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.* ஒருவர் மற்றவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும், ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது, அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.* அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினைக்காது.* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.* இளைஞர்கள் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர், ஆனால் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் புதிய ஆற்றல் பெறுவர்.- பைபிள்