மிருதுவாக பேசுங்கள்
UPDATED : மார் 11, 2013 | ADDED : மார் 11, 2013
* சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால், தெய்வீகத்தன்மையோ எல்லாவற்றிலும் அதிகமான பலன் தருவதாகும். இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும்.* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.* மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தைத்தான் கிளப்பிவிடும்.* உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல் வெளியிலுள்ள லீலிப்புஷ்பங்கள் எப்படி வளருகின்றன என்று கருதிப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை. நூற்பதுமில்லை.* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. - பைபிள் பொன்மொழிகள்