அன்பால் ஒன்றுபடுங்கள்
* கடவுளின் ஜீவன் எங்கிருக்கிறதோ அங்கு சுதந்திரமுண்டு.* வேஷதாரியே, முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்தெறி. பிறகு, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்தெறியத் தெளிவாய்ப் பார்க்கலாம்.* சிறைக்கு வழி நடத்துபவன் சிறைக்குள்ளே போவான். வாளாலே கொல்லுகிறவன் வாளாலே கொல்லப்பட வேண்டும்.* சகோதரரே, நீங்கள் சுதந்திரத்துக்கு அழைக்கப்பட்டுஇருக்கிறீர்கள். சுதந்திரத்தை உங்கள் சரீர இச்சைகளுக்குரிய ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்த வேண்டாம். ஆனால், அன்பினால் ஒருவருக்கொருவர் பணிபுரியப் பயன்படுத்துங்கள்.* எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில் இவைகளையெல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள்.* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.- பைபிள் பொன்மொழிகள்