கடவுளின் ஆசி நமக்கு உண்டு
* உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முழு முயற்சியுடன் செய்யுங்கள்.* அடிமையேயாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து நன்மையே பெறுவர்.* அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். * நெஞ்சே கடவுளுக்காக மவுனமாய்க் காத்திரு! எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே.* வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.* நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.* தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் இறை மக்களுக்கான ஒளிமயமான உரிமைப் பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்.-பைபிள் பொன்மொழி