என்ன கொண்டு வந்தீர்கள்?
UPDATED : நவ 08, 2010 | ADDED : நவ 08, 2010
* தீய செயலின்று உன் நாக்கைக் காப்பாற்று. வஞ்சக மொழியை உன் வாயை விட்டு விலக்கிவிடு.* தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.* உங்களைத் திருமண விருந்திற்கு அழைத்திருந்தால் பந்தியில் முதன்மையான இடத்தில்அமராதீர்கள்.* உலகத்திற்கு நாம் எதையும் கொண்டுவந்ததில்லை, உலகத்தைவிட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது.* மனித வலிமையை விட கடவுளின் வலுவின்மை வலிமை மிக்கது.* அடிமைகளாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுகின்றனர்.* உலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும் முழு மனதோடும் கீழ்ப்படியுங்கள்.-பைபிள்