உள்ளூர் செய்திகள்

ஒழுக்கம் உயர்வு தரும்

* நல்லவர்களின் சேர்க்கை நன்மைக்கு வழிவகுக்கும். ஒருவன் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் நல்ல நண்பர்களோடு பழகாதது தான். * பணம் சேரச் சேர சாப்பாடு மட்டுமல்ல தூக்கம், ஒழுக்கம், பக்தி இவையும் கூட குறையத் தொடங்கும்.* படிப்பினால் வரும் அறிவை விட அனுபவ அறிவே மேலானது. அனுபவசாலிகளின் அறிவுரைக்குச் செவிசாய்ப்பது நல்லது.* பத்தியம் இருந்தால் வியாதி தீர்வது போல, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், தெய்வ நிலைக்கு உயரலாம்* தன் புகழ் தெரியாமல் வாழும் நல்லவர்களின் புகழை, கடவுள் மூன்று உலகத்திலும் சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்துவார்.* வெயில் அதிகம் அடித்தால் மாலையில் மழை வரும். அதுபோல, அநீதி உலகில் அதிகரித்து விட்டால் மகான்கள் அவதரிப்பார்கள். - வாரியார்