எளிமையைக் கடைபிடியுங்கள்
UPDATED : மார் 20, 2016 | ADDED : மார் 20, 2016
* ஆடம்பரமோ அலட்சிய எண்ணமோ மனிதனுக்கு கூடாது. எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.* உறவினர் கூட நம்மைக் கைவிட கூடும். ஆனால் செய்த தர்மம் கூடவே வரும்.* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் தனக்கென சுயநலத்துடன் செய்வது கூடாது. அது பிறருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.* மரணவேதனை லட்சம் தேள்கள் கொட்டியது போல கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.* உடலை வளர்க்க உணவு அவசியம். அதுபோல உயிரை வளர்க்க பிரார்த்தனையும் அவசியமானது.-வாரியார்