உள்ளூர் செய்திகள்

இரண்டு ஆசைகளை விடுவோம்!

* தெய்வீக நம்பிக்கைக்கு ஆதாரமாக  உனக்குள் தெய்வம் உள்ளது. தினமும் சிறிது நேரமாவது கண்ணை மூடித் தியானம் செய்து 'நீ யார்' என ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.* அறிவு வடிவான இறைவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிய வேண்டும். நூலறிவில் மட்டுமல்லாது மெய்யுணர்வு என்ற  அறிவினால் அறிய வேண்டும்.* பெண்ணாசையை விட்டுவிடு என்று ராமாயணமும், மண்ணாசையை விட்டுவிடு என்று மகாபாரதமும் நமக்கு அறிவுறுத்துகின்றன.* பொருளாசை உடையவனுக்கு தகரம் கூட  ரூபாயாகத்தான் தோன்றும். பயமுடையவனுக்கு கட்டை கூட பிசாசாகத் தான் தோன்றும். அதுபோல் பக்தியில் சிறந்தவனுக்கு எதைப் பார்த்தாலும் கடவுளாகத் தோன்றும்.* கலங்கிய தண்ணீரில் சூரிய பிம்பம் தெரியாது. அதுபோல் தெளிவில்லாத உள்ளத்தில் கடவுள் தெரிய மாட்டார்.* குளிக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான், அதுபோல்  கடவுளை நினைக்காவிட்டால் நஷ்டம் நமக்குத்தான்! - வாரியார்