உயிர்களை நேசியுங்கள்
UPDATED : டிச 13, 2015 | ADDED : டிச 13, 2015
*எல்லா உயிர்களும் கடவுள் வாழும் கோவில்கள். அதனால், உயிர்களை நேசித்து வாழ்வது நம் கடமை.* சிறியவன் என்று யாரையும் இகழ்வது கூடாது. அனைவரையும் சமமாக கருதுபவனே நல்ல மனிதன்.*இந்தப் பிறவியில் செய்த நன்மையின் பயன், மறுபிறவியில் புண்ணியமாக நம்மை வந்தடைகிறது.*பிறர் கூறும் வசை மொழிகளைக் கூட இனிய சொற்களாகக் கருதுபவனே சிறந்தவன்.* உலகில் எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை. எதுவும் தெரியாதவர் என்றும் ஒருவர் கிடையாது.-வாரியார்