உள்ளூர் செய்திகள்

இதுவே சிறந்த விரதம்

* பெண்ணாசையை விட்டு விடு என ராமாயணமும், மண்ணாசையை விட்டு விடு என மகாபாரதமும் நமக்கு வழிகாட்டுகின்றன.* புகழ்ச்சியைக் கண்டு மகிழ்வதும், இகழ்ச்சியைக் கண்டு துவள்வதும் கூடாது. இரண்டையும் சமமாகக் கருதினால், மனதில் அமைதி நிலைக்கும்.* நீர், நிலம், ஆகாயம் போன்ற இயற்கை கூட ஒருநாள் அழிந்து போகும். ஆனால், செய்த தர்மத்திற்கு என்றும் அழிவில்லை. * பணிவு மனித வாழ்வின் உயிர்நாடி. பணிவின்றி வாழ்பவன் வாழ்வில் வளர்ச்சி பெற முடியாது.* ஒருவன் வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவன் எண்ணத்தைப் பொறுத்ததே.* பிறர் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுப்பதும், எந்த உயிர்களைக் கொல்லாமல் இருப்பதுமே சிறந்த விரதமாகும்.- வாரியார்