பண்புடன் நடப்போம்
UPDATED : ஏப் 01, 2014 | ADDED : ஏப் 01, 2014
* பாவத்தை வெறுக்கலாம். ஆனால், பாவம் செய்தவனை வெறுப்பது கூடாது.* பிறரிடம் நாம் செய்த பாவத்தை மறைப்பது, உடலில் தங்கியிருக்கும் நஞ்சு போன்றது.* சத்தியம் என்னும் பரிபூரண நிலையே கடவுள். அதை மட்டும் வணங்குவதே சிறந்த மார்க்கம்.* வாழ்நாள் முழுதும் உண்டான பழக்கத்தை நினைத்தவுடன் போக்கி விட முடியாது.* பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே பண்பாடு ஒருவனுக்கு வந்து விட முடியாது.- காந்திஜி