உள்ளூர் செய்திகள்

பொறுமையாக இருங்கள்!

* தான் மிகவும் சாதாரணமானவன் என்பதை உணர்ந்து விட்டால், மனிதன் மனப்பூர்வமாகக் கடவுளிடம் சரணாகதி அடைந்து விடுவான்.* தன்னம்பிக்கை இல்லாதவருக்கு வாழ்க்கை அச்சமூட்டுவதாக இருக்கிறது. அரக்கத்தனமான அச்சத்தின் பிடியை அவ்வளவு சுலபத்தில் உங்களால் விலக்க முடியாது. ஆனாலும், அதை விரட்டியே ஆக வேண்டும்.* வாழ்வில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும். எது வந்தாலும் சலனமின்றிப் பொறுமையோடு எதிர்கொள்ளுங்கள்.* அறிவு, செயல் இரண்டாலும் கடவுளுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த பிணைப்பால் உள்ளம் மகிழ்ச்சி பெறும்.* வாழ்வில் மாற்றம் உண்டாக வேண்டுமானால், கால அவகாசம் தேவைப்படும். அதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருப்பது அவசியம்.- ஸ்ரீஅன்னை