அமைதியாக இருங்கள்
UPDATED : மே 31, 2017 | ADDED : மே 31, 2017
* எப்போதும் அமைதியாக இருங்கள்ர. பேசாமல் இருக்கக் கற்றுக் கொண்டால் பிரச்னை வராமல் தடுக்க முடியும். * கடவுள் ஒருவரால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். அவர் மீது பக்தி செலுத்துவதே உண்மையான மகிழ்ச்சி. * ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான வழிமுறை. அது உங்கள் சுயவிருப்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. * பிறருக்கு புத்திமதி கூறும் முன் உங்களுக்கு அத்தகுதி இருக்கிறதா என்று ஒருமுறை யோசித்துப் பாருங்கள். * நீங்கள் செய்யும் வேலையையும் கடவுளுக்குச் செலுத்தும் பிரார்த்தனையாக கருதி முழுஈடுபாட்டுடன் செய்யுங்கள். ஸ்ரீஅன்னை