நல்லதே நடக்கட்டும்!
UPDATED : மார் 06, 2017 | ADDED : மார் 06, 2017
* நல்லவனாகவும், பிறருக்கு மகிழ்ச்சி அளிப்பவனாகவும் இருந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும்.* ஆன்மிகத்தால் மட்டுமே வாழ்வை தெய்வீக நிலைக்கு உயர்த்த முடியும்.* நோயில் உடல் துடித்தாலும், மனம் அமைதியுடன் எதிர்கொண்டால் அதன் கடுமை குறைந்து விடும்.* தவறை உணர்ந்து திருந்துவது ஒன்றே, வாழ்வில் தவறு நேராமல் இருப்பதற்கான ஒரே வழி.* மனத்தெளிவு கொண்டவர்கள், மற்றவர் மீதுள்ள குறைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள்.- ஸ்ரீஅன்னை