உழைப்பால் உயர்ந்திடு!
UPDATED : மே 02, 2016 | ADDED : மே 02, 2016
* உழைப்பின் மீது நம்பிக்கை கொள். வாழ்வில் உயர்வோம் என்ற எண்ணம் ஒவ்வொரு அணுவிலும் பரவட்டும்.* உலகத்தை ரசிக்கக் கற்றுக் கொள். எரிச்சல் தரும் விஷயத்தையும் உனக்கு கிடைத்த பாடமாகக் கருது.* நேர்மையாக வாழ்ந்தால் பேரானந்தம் உண்டாகும். நேர்மைக்கான பரிசும் அதில் அடங்கி இருக்கிறது.* உள்ளம் ஒளியுடையதாக இருந்தால் உலகெங்கும் தெய்வீக அன்பு நிறைந்திருப்பதை உணர முடியும்.* குறிக்கோளைப் பொறுத்தே வாழ்வு அமையும். அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் இரு.- ஸ்ரீஅன்னை