உள்ளூர் செய்திகள்

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!

* ஒரு செயலைத் தொடங்கும் முன்பு, அதனால் உண்டாகும் பயனை எண்ணி செயல்பட வேண்டும்.* ஒருவனுக்கு சிறப்பு தருவது இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல. அவன் செய்யும் செயல் மட்டுமே சிறப்பைத் தருகிறது. * படிப்பு பண்பைத் தருவதுடன், வாழ்வையே மாற்றும் வகையில் உள்ளது. * ஒரு மனிதனை மனிதன் ஆக்குவது கல்வி. அவனை நல்வழிப்படுத்துவது கல்வி. அவனை ஒழுக்க சீலனாய் மாற்றுவதும் கல்வியேயாகும்.* நாம் பிறர்க்கு உதவி செய்யவும் படைக்கப்பட்டிருக்கிறோம். கைகள் வாங்குவதற்கு மட்டுமல்ல, கொடுப்பதற்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளது.* பணம் வாழ்விற்குத் தேவை. ஆனால், பணமே வாழ்க்கையல்ல என்பதை உணரவேண்டும்.* குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது, பெற்று வளர்த்து, சான்றோன் ஆக்குதலே தந்தையின் கடமை.* உள்ளத்தில் அன்பு நிறைந்தால், உதட்டில் இனிமையான சொல் பெருகும். இதனால் புன்னகை பூக்கும், மகிழ்ச்சி பெருகும். இன்பம் கூடும், வாழ்வு இனிதாகும்.- திருவள்ளுவர்(இன்று திருவள்ளுவர் தினம்)