உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மகரம்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)மகரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை நடக்கும். மன பயம் போகும்.உத்திராடம் 2,3,4: சூரியன், புதனால் வேலை இழுபறியாகும். கவனக்குறைவால் நெருக்கடி ஏற்படும். கடந்த காலத்தில் சந்தித்த பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். அனைத்திலும் நிதானம் தேவை.திருவோணம்: அஷ்டம ஸ்தானத்தில் கேது, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் எதிர்பாராத பிரச்னை தோன்றும். ஒரு சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். எதிரிகள் கை ஓங்கும்  எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சனிக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.அவிட்டம் 1,2: செவ்வாய்க்கு குருபார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் நெருக்கடி நீங்கும். புதிய முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 19.9.2025 காலை 9:33 மணி - 21.9.2025 மாலை 5:18 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !