தினமலர் செய்தியால் தீர்வு
மேலுார் : மேலுார் நகராட்சி வார்டு 16,18 பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல மாதங்களாக வீணாகியது. அதனால் வீட்டுக்குழாய்களில் தண்ணீர் வராமல் குடிநீரை மக்கள் விலைக்கு வாங்கும் அவலம் நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பொறியாளர் முத்துக்குமார் தலைமையில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது.