தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு
மேலுார்: மேலுார் நகராட்சி 9 வது வார்டில் தெருவிளக்குகள் இரவு, பகலாக எரிந்தது. இதனால் மின்சாரம் மற்றும் மக்களின் வரிப்பணம் வீணானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து விளக்குகளை பழுது நீக்கி, பகலில் எரிவது நிறுத்தப்பட்டது. வீணான மின்சாரம், மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டது.