உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: டில்லி, சத்தீஸ்கர் மதுபான ஊழலை தொடர்ந்து, தமிழகத்திலும் தற்போது மதுபான ஊழல் நடந்துள்ளது. அமலாக்க துறை சோதனையில், 30,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுபான ஊழல் மூலம், தி.மு.க.,வுக்கு மட்டும் 1,000 கோடி ரூபாய் கருப்பு பணமாக மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தின் மூலம், 2024 லோக்சபா தேர்தலை சந்தித்து உள்ளனர். அடுத்து, 2026 சட்ட சபை தேர்தலையும் சந்திக்க, நிறைய பணம் பதுக்கி உள்ளனர்.டவுட் தனபாலு: கிராமங்கள்ல, 'எரியுறதை பிடுங்கிட்டா, கொதிக்கிறது அடங்கிடும்'னு சொல்லுவாங்க... அந்த வகையில, 2024 தேர்தல் வெற்றிக்கு தி.மு.க.,வுக்கு உதவிய மதுபான ஊழல் பணம், 2026 தேர்தல் வெற்றிக்கும் உதவிட கூடாதுன்னு உஷாராகியே, அமலாக்க துறையை அனுப்பி சோதிக்கிறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!  த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா, குறுவை சாகுபடியில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், 1.80 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அவை, தற்போது பெய்த மழையில் நனைந்து சேதமடைந்தன. இதற்கு கொள்முதல் நிலையங்களில் போதிய இடம், தார்ப்பாய்கள் இல்லாததே காரணம்.டவுட் தனபாலு: மார்ச் மாசத்துல மழை பெய்யும்னு அதிகாரிகள் கனவில் கூட நினைச்சிருக்க மாட்டாங்க... ஆயினும், வரும்முன் காக்க தவறிய அதிகாரிகளிடமே இதற்கான இழப்பீட்டை வசூலிக்கணும்... அதுதான், எதிர்காலத்தில் அவங்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!  தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி: 'கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்' என, முதல்வர் சித்தராமையா சொல்கிறார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டப்படும் கூட்டத்துக்கு, சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்க பெங்களூரு சென்ற நம் அமைச்சர் பொன்முடி, 'மேகதாதுவில் அணை கட்டக்கூடாது; அப்படி கட்டினால், எங்கள் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவர்' என்பதை வலியுறுத்தி சித்தராமையாவிடம் பேசியிருக்க வேண்டாமா?டவுட் தனபாலு: திருமண விழாவுக்கு உறவினருக்கு பத்திரிகை வைக்க போற இடத்துல, அவர் தர வேண்டிய கடனை கேட்க முடியுமா...? உங்க வாதப்படியே பொன்முடி கேட்டு, அதுக்கு சித்தராமையா தலையை ஆட்டியிருந்தாலும், அம்மாநிலத்துல இருக்கிற உங்க கட்சியினர் ருத்ரதாண்டவமே ஆடியிருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
மார் 15, 2025 06:20

தேர்தல் பணிக்கு மட்டும் ஆசிரியர், அரசு ஊழியர்களை இழுத்துவிடும்போது, ஓட்டுச் சாவடிகளில் இவர்கள் செய்யும்மத்தனை முறைகேடுகளுக்கும் உள்கையாக இருக்கவேண்டும் நீங்கள் ஒவ்வொரு துறையிலும் செய்யும் ஊழல், முறைகேடுகளுக்கு ஆலோசகர்களாக இருக்க அழைப்பீர்களல்லவா, அப்போது இவர்களே காட்டிக்கொடுக்க முன்வந்தால் உங்கள் கதை என்ன ஆகும் ?


கிஜன்
மார் 15, 2025 00:12

சட்டம் ஒழுங்கு .... யார் அந்த சார் ... என தள்ளாடிக்கொண்டிருந்த அரசுக்கு .... கல்விநிதியில் சிறப்பாக உளறி .... 2026ல் அறுதிபெரும்பான்மை அடைய உதவிய தர்மேந்திரனுக்கும்.... ஆட்டிற்கும் நன்றி ...


Yes your honor
மார் 15, 2025 09:02

அரசு தள்ளாடுகிறது என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. தள்ளாட்டம் இன்னும் அதிகம் தான் ஆகப்போகிறது, டாஸ்மாக் ஊழல் வேறு உடன் இணைத்துக்கொண்டு உங்கள் தலைவர்களின் தொடைகளின் ஆட்டம் அதிகம் தான் ஆகப் போகிறது. பரவாயில்லை, இப்பொழுதெல்லாம் அல்லக்கைகள் உண்மைகளை ஒப்புக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. ஒருதன் உங்கள் கட்சியிலுள்ள அரைகுறை நடிகர்களை எல்லாம் பொறுக்கிகள் என்று அழைக்கிறான். ஒருத்தன் நாங்கள் உத்தம சிகாமணிகள் என்று கூறிவிட்டு, பைனாப்பிள் கேசரி தின்கிறான். நீங்கள் சட்டம் ஒழுங்கு சரியில்லை, யார் அந்த சார் எல்லாம் நாங்கள்தான் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். வாழ்த்துக்கள் கிஜன். தொடரட்டும் உங்களின் இந்த சமூகப் பணி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை