வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருட்டு இந்தியர்களுக்கு பணவெறியும் பிடித்து விட்டது. நியாய சம்ஹிதை புண்ணாக்ஜெல்லாம் ஓரம்.கட்டிட்டு, சைபர் குறங்கள் செய்து மாட்டுபவர்களை பொது இடத்தில் போட்டுத்தள்ளுவதுதான் சிறந்த தண்டனையா இருக்கும்.
குன்னுார்; குன்னுாரில் 'ஆன்லைனில்' டிரிம்மர் மிஷின் வாங்க ஆர்டர் செய்தவருக்கு, ஜல்லி கற்கள் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் மேல் கடை வீதி பகுதியை சேர்ந்தவர் காஜா. இவர் சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைனில், டிரிம்மர் மிஷின் வாங்க ஆர்டர் செய்துள்ளார். கூரியரில் டெலிவரி செய்த போது, எடையளவில் சந்தேகமடைந்த அவர் பார்சலை பிரித்துள்ளார். அதில், பார்சலுக்குள் வெறும் ஜல்லி கற்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பிரிக்கும் போது வீட்டில் இருந்தவர்கள் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். கூரியர் நிறுவன ஊழியர்கள் கூறுகையில்,'சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்களில் நேரடியாக ஆர்டர் செய்யாமல், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூலம் வரும் லிங்குகளை கிளிக் செய்து ஆர்டர் செய்வதால் இதுபோன்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரடியாக சம்பந்தப்பட்ட தனியார் ஆன்லைன் நிறுவனங்களின் 'ஆப்' களின் மூலம் பதிவு செய்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாது,' என்றனர்.
திருட்டு இந்தியர்களுக்கு பணவெறியும் பிடித்து விட்டது. நியாய சம்ஹிதை புண்ணாக்ஜெல்லாம் ஓரம்.கட்டிட்டு, சைபர் குறங்கள் செய்து மாட்டுபவர்களை பொது இடத்தில் போட்டுத்தள்ளுவதுதான் சிறந்த தண்டனையா இருக்கும்.