உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி; பணியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர்

 மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி; பணியில் ஒரே ஒரு தலைமை ஆசிரியர்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியாகுடி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களே படிக்காத நிலையில் தலைமைஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார். ஆதியாகுடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சில ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கை மிக குறைவாக இருந்தது. கடந்த கல்வி ஆண்டில் 2 மாணவர்கள், 2 மாணவிகள் என 4 மாணவர்கள் படித்து வந்தனர். நடப்பு கல்வியாண்டு துவங்கியதும் 2 மாணவர்கள் ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். மீதமுள்ள 2 மாணவிகள் மூன்றாம் வகுப்பு படித்தனர். இவர்களும் அருகில் உள்ள புளியால் அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்து விட்டனர். இதனால் ஆதியாகுடி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களே இல்லை என்ற நிலையில் ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் பணியில் உள்ளார். இவரே தினமும் பள்ளியை திறந்து பூட்டிவிட்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மாணவர்கள் இல்லாததால் ஆதியாகுடி பள்ளியை மூடும் நிலை உள்ளது. கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து சுற்று கிராமங்களில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Suresh G
ஜூன் 18, 2026 15:37

லைப்ரரி ஆக்கி விடலாம்


Suresh G
ஜூன் 18, 2026 15:37

நூலகம் ஆக மாற்றலாம்


KRISHNAN R
ஜூன் 18, 2026 09:42

நிறைய பள்ளிகள் இருக்கும்


Ganapathi Amir
ஜூன் 17, 2026 04:17

அங்குள்ள மக்களுக்கு இலவசக்கல்வி தேவையில்லாத அளவுக்கு பணக்காரர்களாக உள்ளனர் போல..அப்போது அனைத்து அரசு இலவசங்களையும் அங்கு நிறுத்திவிடலாம்.. மக்கள் பணம் மிச்சம்..


aaruthirumalai
ஜூன் 16, 2026 19:44

ஐந்தாவதுவரை தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கூடாது.


பாரதன்
ஜூன் 16, 2026 19:29

மனசாட்சி இல்லாமல் தனியார் பள்ளிகளை வளர்க்கும் அரசுகள் வாழ்க. அரசு பள்ளிகளை நம்பாத மக்கள் வாழ்க.


Bhaskaran
ஜூன் 16, 2026 08:26

மனசாட்சி இல்லாமல் தண்ட சம்பளம் வாங்கும் வாத்தியார் நீடூழி வாழ்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை