உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  டீக்கடையாக மாறியது பழைய வி.ஏ.ஓ., அலுவலகம்

 டீக்கடையாக மாறியது பழைய வி.ஏ.ஓ., அலுவலகம்

தஞ்சாவூர்: சேதமடைந்த பழைய வி.ஏ.ஓ., அலுவலகத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, டீக்கடையாக மாற்றியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆதனக்கோட்டை கிராமத்தில், திருவோணம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரனின் தொகுதி மேம்பாட்டு நிதியில், 2001 - 2006ம் ஆண்டு வி.ஏ.ஓ., அலு வலகம் கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன், வி.ஏ.ஓ., அலுவலக மேற்கூரை சேதம் அடைந்தது. இதையடுத்து , புதிய அலுவலகம் கட்டப்பட்டு, வி.ஏ.ஓ., அலுவலகம் அங்கு மாற்றப்பட்டது. பழைய கட்டடம் பயன்பாடு இல்லாத நிலையில், அவ்வூரை சேர்ந்த ஒருவர், ஆளும்கட்சி மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன், அந்த கட்டடத்தை டீக்கடையாக மாற்றியுள்ளார். இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு நிதியில் கட்டப்பட்ட வி.ஏ.ஓ., கட்டடம் சேதமடைந்ததால், அதை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டலாம் அல்லது பஞ்சாயத்துக்கு சொந்தமான இடமாக இருந்தாலும், சேதமடைந்த கட்டடத்தை, பஞ்சாயத்து நிர்வாகம் வேறு பொது பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து, டீக்கடை நடத்தி வருகிறார்.ஆளும்கட்சி மற்றும் அதிகாரிகள் துணையோடு தான் இது நடக்கிறது. இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

dandanakka
பிப் 25, 2026 08:39

இது நம்ம வீட்டுக்கு நடக்காம பாத்துக்கணும். ஆட்சி அப்படி.


sankaranarayanan
பிப் 25, 2026 04:06

இது இப்படியே சென்றால் திராவிட மாடல் அரசே ஆளும் கோட்டையை ஒரு புராதன சின்னமாக மாற்றி அங்கே ஒரு மக்கள் பார்வைகூடமாக மாற்றி அமைத்தாலும் யாரும் கேட்பாரில்லை என்றாகிவிடும் பிறகு அதிலே கருணாநிதி குடும்ப வரலாறு அடங்கிய சின்னங்கள் புத்தகங்கள் மக்கள் பார்வைக்கு வைத்தாலும் வைப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை