உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  கூச்சலிட்டபடி சென்றதால் த.வெ.க.,வினர் கார் பறிமுதல்

 கூச்சலிட்டபடி சென்றதால் த.வெ.க.,வினர் கார் பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், புது பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் காரில் தொங்கியபடி, தேர்தலில் த.வெ.க., வெற்றியை கொண்டாடிய , 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர். தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதால், அக்கட்சியை சேர்ந்தவர்கள் ராமநாதபுரத்தில்ஆரவாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம் 1:30 முதல் மாலை 6:00 மணி வரை, ஒரு காரில் தொங்கியபடி, 12 வாலிபர்கள் புது பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலக வளாகம், ராமேஸ்வரம் ரோட்டில் விசில் அடித்து கூச்சலிட்டு சென்றனர். இதனால், போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக, கேணிக்கரை எஸ்.ஐ., திருமுருகன் புகாரில், ராமநாதபுரத்தை சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
மே 08, 2026 07:17

தோத்த அன்னிக்கே ரோட் ஷோ உட்ட விடியல் அமைதியா போனாரு.


sankaranarayanan
மே 07, 2026 22:45

எந்த அரசாக இருந்தாலும் இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் அராஜகம் அகற்றப்பட வேண்டும்


பாரதி
மே 07, 2026 13:36

கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் ஏற்படுத்திய காவல்துறை தானாக சட்டத்தை நிலை நிறுத்தாது யாராவது வேலை வெட்டி இல்லாதவர்கள் போய் கெஞ்சி கேட்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் கருணை கண்களை திறப்பார்கள் வீணா போனவர்கள்


mainapproach
மே 07, 2026 13:22

விஜய் ரசிகர்கள் எல்லாம் ரௌடிகள் , தமிழ்நாடு நாசம்தான் போகும், வரும் நாட்களில்.


Rathna
மே 07, 2026 12:19

அலப்பறை கூட்டங்களை சிறையில் அடைத்து பாடம் எடுக்க வேண்டும்.


VENKATASUBRAMANIAN
மே 07, 2026 08:13

நல்ல நடவடிக்கை. இதை விஜய்க்கு தெரியப்படுத்துங்கள்.


Govi
மே 07, 2026 05:53

அந்த காரை உடைத்து பழய இரும்புக்கு போடலாம்


புதிய வீடியோ