உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்

தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்

சென்னை: வாரணாசியில் இருந்து தமிழகம் வந்துள்ள, 300 மாணவர்கள், தமிழ் மொழியை கற்க ஆர்வமாக உள்ளனர். 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சியின் நிறைவாக, வாரணாசி மாணவர்களுக்கு தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தை கற்பிக்க முடிவு செய்யப்பட்டு, அங்கிருந்து, 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த, 20ம் தேதி தமிழகம் வந்தனர். அவர்களை கவர்னர் ரவி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அந்த மாணவர்கள், 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, புதுச்சேரி, காந்தி கிராமம், சாஸ்த்ரா, சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்கலை மற்றும் கொங்குநாடு, சுதர்சன் ஜெயின் உள்ளிட்ட கல்லுாரிகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த ஆண்டு, 'தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளில், தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம், கல்வி மரபுகள் உள்ளிட்டவை, வாரணாசி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கும், ஐந்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஹிந்தி மொழி வழியாக, தமிழ் இலக்கண, இலக்கியங்கள், வட - தென் எல்லைகளின் கலாசார ஒற்றுமைகளை கற்பிப்பதுடன், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் அவர்களை அழைத்து செல்ல உள்ளனர். இந்நிகழ்ச்சி வரும், 31ம் தேதி, ராமேஸ்வரத்தில் நிறைவு பெறும். அதில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SRIDHAAR.R
டிச 23, 2025 05:50

வாருங்கள் மாணாக்கர்களே தேசத்திற்காக பாடுபட்ட பெயர் தெரியாத வடதேசத்தவரை அடையாளப்படுத்துங்கள்


rukmani
டிச 23, 2025 02:14

வரவேற்க தக்க துவக்கம். தொன்றுதொட்டு காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்துக்கொண்டு காசி சென்று கங்கை ஜலத்தில் கரைத்துவிட்டு அங்கிருந்து கங்கை ஜலம் கொண்டுவந்து அதை ராமேஸ்வரம் -தனுஷ்கோடி சமுத்திர கரையில் சேர்ப்பர். வடக்கு-தெற்கு பேதம் கிடையாது. "யாதும் ஊரே யாவரும் கேளீர்" அடிவேர் தத்வம்.


சமீபத்திய செய்தி