புதுச்சேரி: புகார் பெட்டி
சாலை குண்டும் குழியுமாக உள்ளது: மூலக்குளதில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. - தீபன், சாலைத்தெரு. பகலிலும் எரியும் மின் விளக்கு: உழவர்கரை, பாலாஜிநகர், 5வது குறுக்குத் தெருவில் தெருவிளக்கு இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கிறது. -சுந்தரமூர்த்தி, உழவர்கரை. தெரு நாய்கள் தொல்லை: வில்லியனுார், கண்ணகி நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. - ரவி, வில்லியனுார். பன்றிகள் தொல்லை: முருங்கப்பாக்கம், ரங்கசாமி நகரில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. - வனஜா, முருங்கப்பாக்கம்.