புகார் பெட்டி: காரணி மண்டபத்தில் பயணியர் நிழற்குடை சேதம்
உ த்திரமேரூர் அடுத்த, காரணி மண்டபத்தில், புக்கத்துறை --- மானாம்பதி நெடுஞ்சாலை உள்ளது. இங்குள்ள, பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நிழற்குடை சேதமடைந்து கூரையிலிருந்து கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. பயணியர் நிழற்குடை சேதமடைந்து உள்ளதால், இதை பயன்படுத்த பயணியர் முன்வருவதில்லை. எனவே, ஊரக வளர்ச்சி துறையினர் சேதமடைந்துள்ள பயணியர் நிழற்குடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -- ஜெ.ஜான் ஜெபராஜ், காரணி மண்டபம்.