/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார்பெட்டி; மண் துார்ந்த வடிகால்வாயை துார்வார வேண்டும்
காஞ்சிபுரம்: புகார்பெட்டி; மண் துார்ந்த வடிகால்வாயை துார்வார வேண்டும்
மண் துார்ந்த வடிகால்வாயை துார்வார வேண்டும்
உ த்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண் டி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பள்ளிக்கூட தெருவில் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாயை பயன்படுத்தி அப் பகுதிவாசிகள் வீட்டு உபயோக கழிவுநீரை வெளியேற்றி வந்தனர். தற்போது, வடிகால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கால்வாயில் செடிகள் வளர்ந்து, மண் துார்ந்து உள்ளது. இதனால், மழைநீர் மற்றும் வீடுகளின் கழிவுநீர் வெளியேற முடியாத சூழல் உள்ளது. எனவே, வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, ஊரக வ ளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - -சு.இன்பசேகரன், கருவேப்பம்பூண்டி.