உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / ராமநாதபுரம் / சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்; அதிகாரிகளின் கவனத்திற்கு.

சூப்பர் ரிப்போர்ட்டருக்கு வந்த புகார்கள்; அதிகாரிகளின் கவனத்திற்கு.

குளமாகும் ரோடு மழை பெய்தால் ராமநாத புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது. தடையின்றி தண்ணீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுகுமாறன் பட்டணம்காத்தான் தெருநாய்கள் தொல்லை ராமநாதபுரத்தில் மதுரை ரோட்டில் திரியும் நாய் களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவற்றை பிடித்து தடுப்பூசி போடவேண்டும். - மாரிமுத்து, ராமநாதபுரம் சுற்றுச்சூழல் கேடு ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டினம் செல்லும் ரோட்டோரத்தில் குப்பையை கொட்டி எரிப்பதால் புகை பரவி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பை கொட்டுவதை தடுத்து எரிப்பவர்கள் மீது ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பூங்கொடி, தேவிபட்டினம் குண்டும் குழியுமான ரோடு ராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் ரோடு சேதமடைந்துள்ளதால் அவ்வழியாக சென்று வரும் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்னறனர். அதிகாரிகள் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - மாரியம்மாள், ராமநாதபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !