கலைவாணி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
செஞ்சி: செஞ்சி, கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் தேர்வெழுதிய 60 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். மாணவர்கள் கோகுலகிருஷ்ணன் 600க்கு 555, பாலா 521, மாணவி மசிஹா பர்சானா 499 மதிப்பெண் எடுத்து முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர். மேலம், 500 மதிப்பெண்ணுக்கு மேல் 2 மாணவர்களும், 450க்கு மேல் 11, மாணவர்களும், 400க்கு மேல் 22 மாணவர்களும், 350க்கு மேல் 15 மாணவர்களும் பெற்ற னர். 90 மதிப்பெண்ணுக்கு மேல் தமிழில் 17 பேரும், ஆங்கிலத்தில் 3 பேரும், கணிதத்தில் 2 பேரும், உயரியியலில் 3 பேரும், கணினி அறிவியலில்4 பேரும் பெற்றனர். முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை தாளாளர் ரங்கநாதன் பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் பூங்குழலி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உடன் இருந்தனர்.