தகவல் சுரங்கம்
கல்வி வளர்ச்சி தினம்
தமிழக முதல்வராக மூன்று முறை இருந்த காமராஜரின் பிறந்த தினம், கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1903 ஜூலை 15ல் விருதுநகரில் பிறந்தார். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்யாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார். 1954 ஏப்.13ல் தமிழக முதல்வரானார். இவரது ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்களை தொடங்கினார். பல அணைகள் கட்டப்பட்டன.