தகவல் சுரங்கம் : தனித்துவமான உயிரினங்களின் தீவு
தகவல் சுரங்கம்தனித்துவமான உயிரினங்களின் தீவுஇந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது மடகாஸ்கர். இது உலகின் நான்காவது பெரிய தீவு, இரண்டாவது பெரிய தீவு நாடு. இது பல்லுயிரினங்களின் இடமாக திகழ்கிறது. இங்குள்ள தாவரங்கள், விலங்கு இனங்களில் 90 சதவீதம், உலகில் வேறு எந்த பகுதியிலும் இல்லை. லெமர், போஸா, இலை வால் பல்லிகள், பச்சோந்தி இனங்களில் பாதி உள்ளிட்டவை இங்கு மட்டுமே வாழ்கின்றன. 18 கோடி ஆண்டுகளுக்கு முன் கோன்ட்வானா எனும் சூப்பர் கண்டத்தில் இருந்து பிரிந்து தனி தீவாக மாறியதால், இங்குள்ள உயிரினங்கள் தனியாக பரிணாம வளர்ச்சி பெற்றன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.