தகவல் சுரங்கம் : உலக ஹீமோபிலியா தினம்
தகவல் சுரங்கம்உலக ஹீமோபிலியா தினம்சிறு காயம் ஏற்பட்டாலும் தொடர்ந்து ரத்தம் வருவது 'ஹீமோபிலியா'. இவர்களுக்கு காயம் ஏற்பட்டால் ரத்தம் உறையாமல் வழிந்து கொண்டே இருக்கும். இப்பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1989 முதல் ஏப்.17ல் உலக ஹீமோபிலியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அனைவருக்கும் வசதி; பெண்கள், சிறுமிகளுக்கும் ரத்தப்போக்கு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் பாதிப்பு உள்ளது. ஏழை, நடுத்தர நாடுகளில் இப்பிரச்னைக்கு சிகிச்சை வசதிகள் மிக குறைவாக உள்ளன.