தகவல் சுரங்கம் : குழந்தைகள் பாதுகாப்பு
தகவல் சுரங்கம்குழந்தைகள் பாதுகாப்புஅப்பாவி குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஜூன் 4ல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது துவக்கத்தில் 1982ல்லெபனான் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது கவனம் செலுத்தியது. பின் ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறையால் உடல், மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய மோசமான பாதிப்புகள் உலகில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது இத்தினத்தின் நோக்கம்.