உள்ளூர் செய்திகள்

காற்றில் அசையும் பச்சைநிறம்...

குறுக்கும் நெடுக்குமாகவேர் கிழிய வீழ்ந்துகிடக்கும்தென்னைகளின் மீது மாறி மாறி அமர்ந்துஎதையோ தேடிக்கொண்டிருக்கும்ஒரு பறவையைபார்த்துக் கொண்டிருக்கிறான்விவசாயிஅவனது வீட்டையும் வயலையும்துடைத்தழித்த புயல்இன்னும் அவனைகடந்து முடியவில்லைமேலாடையற்றஅவனது காந்திய உடல்நடுங்கிக்கொண்டிருந்ததுவிதைத்த கரங்கள்திருவோடுகளாவதைக்கற்பனை செய்ய முடியாமல்கைகளை உதறிக்கொண்டான்கடைசியாக ஒருமுறைதலைதுாக்கிப் பார்த்துசேற்றில் புதைந்துபோனஅந்தப் பசுவின் கண்களைமறக்க முடியவில்லைநேற்று இரவு அந்தப் பசுஅவனது கனவில் வந்ததுநம்பிக்கையின் பச்சைநிறம்காற்றிலசைந்ததுசூரியனின் ஒளிக்கீற்றுகள்அவனது குடிசையைபுதிதாகப் பின்னிக்கொண்டிருந்தனபுன்னகையில் பால்பொங்ககரும்பு வயலுக்குள்ளிருந்துஅவன் வெளிவருகிறான்- கவிஞர் பழநிபாரதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்