உள்ளூர் செய்திகள்

தமிழ் வணக்கம்!

எழுத்தும் நீயே சொல்லும் நீயேபொருளும் நீயே பொற்றமிழ்த் தாயேமுகமும் நீயே அகமும் நீயேமுகவரி நீயே முத்தமிழ்த் தாயேநீயே எங்கள் அடையாளம்நீயே எங்கள் பூகோளம்நீயே எங்கள் வரலாறுநீயே எங்கள் பண்பாடுஅறமே வாழ்வின் அச்சாணி என்றாய்பிறர்க்கென வாழ்தல் பெருவாழ்வென்றால்உறவே உலகென வாழும் உலகில்உலகே உறவென ஓங்கி மொழிந்தாய்குருதியில் உலகம் குளித்த காலையில்போர்க்களம் தோறும் பூச்செடி நட்டாய்ஒன்றே குலமென ஓதி முடித்தாய்நன்றே செய்திட ஞானமளித்தாய்ஆயிரமாயிரம் ஆண்டுகள் எங்கள்ஆன்ற புலவோர் எழுத்தில் இருந்தாய்உழுதும் விதைத்தும் உலகைச் சமைத்தஉழைக்கும் மக்கள் சொல்லில் இருந்தாய்ஆழி அலையிலும் ஆயுத மழையிலும்அழிந்துபடாத பொருளாய் இருந்தாய்நிலவும் கதிரும் நிலவும் வரையில்நீயே தமிழே எங்கள் முதல்தாய்கவிப்பேரரசு வைரமுத்துpoet.vairamuthu@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்