உள்ளூர் செய்திகள்

மலை மண் நிலத்திலும் ஆஸ்திரேலியா பழங்கள்

மலை மண்ணில்,ஆர்., 2 ரக ஆஸ்திரேலியா மாம்பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ராஜிவ் காந்தி கூறியதாவது:மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ மரங்களை நட்டுள்ளேன். அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவில் விளையும், ஆர்., 2 ரக மா மரங்களை சாகுபடி செய்துள்ளேன். இது, மலை மண் நிலத்தில்சாகுபடியாகிறது. குறிப்பாக, இந்த மாம்பழத்தின் தோல் மெலிதாகவும், சதை அதிகமாகவும் இருக்கும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், பிற ரக பழங்களை காட்டிலும், அதிக சுவையுடன் இருக்கும். சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம். பழத்தை ருசித்த பின், மக்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் தயக்கம் காட்டமாட்டர்.இவ்வாறு அவர்கூறினார். தொடர்புக்கு: எம்.ராஜிவ் காந்தி89402 22567


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !