உள்ளூர் செய்திகள்

அதிக வருவாய்க்கு வழிவகுக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணி சாகுபடி

மாடி மற்றும் விளை நிலங்களில், மஞ்சள் கரிசலாங்கண்ணி சாகுபடி செய்வது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜெ.திருவேங்கடம் கூறியதாவது:எங்களுக்கு சொந்தமான விளை நிலங்களில் பிரண்டை, பூனை மீசை, சித்தரத்தை, வசம்பூ, கரிசலாங்கண்ணி உள்ளிட்ட பலவித மூலிகை செடிகள்சாகுபடி செய்துள்ளேன்.பொதுவாக நெல், காய்கறி, கீரை உள்ளிட்ட விளை பொருட்களில் குறைந்த மகசூல் மற்றும் மிக குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மருத்துவம் சார்ந்த கீரைகள் சாகுபடி செய்யும் போது, அதிகவருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கிறது. உதாரணமாக, மஞ்சள்கரிசலாங்கண்ணி கீரை சாகுபடி செய்தால்,கல்லீரல் தொற்று நோய்களை முற்றிலும் தடுக்க பெரிதளவில் உதவுகிறது.பல லட்சம் ரூபாய் செலவழித்து மருந்துகளை வாங்குவதைக் காட்டிலும் சில நுாறுகள் கொடுத்து, மருத்துவ குணம் நிறைந்த கீரைகளை சாகுபடி செய்து, அதிக வருவாய் ஈட்டலாம். குறிப்பாக சிறு கீரை, அரை கீரை, தண்டு கீரை ஆகிய கீரைகள் சாகுபடிசெய்யும் போது, ஒரு கட்டு 10 ரூபாய்க்குவிற்பனை செய்யலாம். அதுவே, மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி உள்ளிட்ட கீரைகளை சாகுபடி செய்யும் போது, மூன்று மடங்கு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இது நெல், காய்கறி ஆகிய விளை பொருட்களை காட்டிலும், குறைந்த மகசூல் தான் கிடைக்கும். இருப்பினும், அதிக வருவாய்க்கு வழிவகுக்கும்.மேலும், மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், கூடுதல்வருவாய்க்கு வழிகிடைக்கும். இவ்வாறு அவர்கூறினார். தொடர்புக்கு: ஜெ.திருவேங்கடம்98437 29166


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !