உள்ளூர் செய்திகள்

வில்லியம்பாக்கத்தில் வரும் 31ல் தேசிய நெல் திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம், கே.ஆர்., இயற்கை விவசாய உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் சார்பில், வரும் 31ம் தேதி, காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, தேசிய நெல் திருவிழா நடைபெற உள்ளது.இதில், இயற்கை பண்ணை விவசாயிகள், வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று, அவரவர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்.தொடர்புக்கு: நீலபூ. கங்காதரன்,96551 56968.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !