உள்ளூர் செய்திகள்

பூச்சி தாக்குதல் இல்லாத தண்டு கீரை

தங்க நிற தண்டு கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது: தங்க நிற தண்டு கீரை சாகுபடி செய்துள்ளேன். இதை, 90 நாளில் அறுவடை செய்யலாம். இந்த ரகத்தில், நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை.நீர் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை முறையாக கையாண்டால், தங்க நிற தண்டு கீரையில் உற்பத்தி அதிகமாக இருக்கும். இது, 120 நாள் வரையில் மகசூல் கொடுக்கும். உயரமாக வளரும் தன்மை கொண்டது.குறிப்பாக, 10 சென்ட் நிலத்தில், 15,000 ரூபாய் வரையில் வருவாய் ஈட்டலாம். 1 ஏக்கருக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரையில், குறைந்த நாட்களில் வருவாய் கிடைக்கும். இது, நெல் மற்றும் காய்கறிகளை காட்டிலும், கூடுதல் வருவாய் தான்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி. குகன், 94444 74428.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !