உள்ளூர் செய்திகள்

தீவன பற்றாக்குறையின் போது பயன்படுத்த சர்க்கரை பாகில் பதப்படுத்திய வைக்கோல்

சர்க்கரை பாகில் பதப்படுத்திய வைக்கோலை, கறவை மாடுகளுக்கு வழங்குவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளன. மேயச்சலுக்கு செல்லும் கறவை மாடுகள் மற்றும் கொட்டகைகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு கோடை மற்றும் தொடர் மழைக்காலங்களில் தீவனம் பற்றாக்குறை ஏற்படுகிறது.தீவனம் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில், கறவை மாடுகளின் வாயிலாக பால் உற்பத்தி வெகுவாக குறைந்து, வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இந்த தீவன தட்டுப்பாடை போக்குவதற்கு, யூரியா, சர்க்கரை பாகு கரைசல் தெளித்த வைக்கோலை உலர்த்திய பின், உலர் தீவனமாக சேமித்து வைக்கலாம்.குறிப்பாக, 10 கிலோ சர்க்கரை பாகு, 2 கிலோ யூரியா, 2 கிலோ தாதுப்பு கலவை, ஒரு கிலோ உப்பு, வைட்டமின் ஏ மற்றும் டி தேவையான அளவு 10 லிட்டர் நீரில் கரைத்து, வைக்கோல் மீது தெளித்து உலர்த்திய பின், உலர் தீவனமாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.இதை, தொடர் மழை மற்றும் கோடை காலங்களில் தீவன பற்றாக்குறை வரும் போது, கறவை மாடுகளுக்கு வழங்கலாம். மாடுகளும் நன்றாக பால் கறக்கும். கறவை மாடு வளர்ப்பிலும் நல்ல வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,97907 53594


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !